Thursday, June 6, 2013

பச்சை தேயிலை மற்றும் காபி இருதயத்துக்கு பாதுகாப்பு! – ஆய்வு அறிக்கை

பச்சை தேயிலை மற்றும் காபி ஆகியவற்றை வழக்கமான உணவாக கொண்டால் இருதயத்துக்கு நல்ல பயன் அளிக்கும் என்று ஜப்பானில் நடந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தேசிய இருதய மையத்தின் தலைமை விஞ்ஞானி யோஷிஹிரோ கொகுபோ கூறுகையில் “பக்கவாதத்தின் அபாயங்கள் மீது பச்சை தேயிலை மற்றும் காபியின் இணைந்த விளைவுகள் குறித்த முதல் பெரிய அளவிலான ஆய்வு இதுதான்.”  மேலும் அவர் கூறுகையில் “நீங்கள் ஒரு சிறிய ஆனால் உறுதியான  வாழ்க்கை மாற்றத்துக்கு உங்கள் உணவில் தினமும் பச்சை தேயிலை சேர்ப்பதன் மூலம் குறைந்தபட்சம்  பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம்”.

பச்சை தேயிலை அல்லது காபி குடிக்கும் மக்களுக்கு பக்கவாதத்தின் அபாயம் குறைந்தபட்சமே என்கிறது சயின்ஸ் டெய்லி அறிக்கை.
“வழக்கமாக டீ மற்றும் காபி குடிப்பது,  ரத்த கட்டிகள் உருவாகாமல், இருதயத்தை ஆரோக்கியமாக வைக்க  பெரிதும் உதவுகிறது” என்று கொகுபோ கூறினார்.

தண்ணீருக்கு பிறகு உலகின் மிக பிரபலமான பானம் தேயிலை மற்றும் காபி தான். அதனால் இந்த ஆராய்ச்சி முடிவுகள் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும் என்று கருதப்படுகிறது.

Wednesday, January 23, 2013

ரகசிய முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை!

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.
1). மலேகன் குண்டு வெடிப்பு: மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள்  தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
2). சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு:  இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். எங்கு திரும்பினாலும் இரத்த வெள்ளம், கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் பல நூறு பேர்கள் என்று அந்த இடமே கோரமாகி போனது.
3).  மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: மக்கா மஸ்ஜித், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் முகலாயர்களின் கட்டிட கலையில் 1694 கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளியில் 2007 மே 18ம் தேதி வெள்ளி கிழமை முஸ்லிம்கள் தொழுகை முடித்து வெளிவரும் பொழுது குண்டு வெடித்தது இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் காயம் அடைந்தனர்.
4). அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள அஜ்மீர் தர்காவில் 2007 அக்டோபர் 11 தேதி முஸ்லிம்களின் ரமலான் நோன்பு மாலை 6.12 pm க்கு குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டுகள் வெடித்தது முஸ்லிம்களின் மசூதிகளில், முஸ்லிம்கள் அதிகமாக பயணித்த ரயிலில் இதில் செத்தது அனைவரும் முஸ்லிம்களே. இப்படி இருந்தும் காவல்துறை இந்த வழக்கில் முதலில் கைது செய்தது முஸ்லிம்களைத்தான் பின்னர் இந்த வழக்கு  2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சுவாமி அசிமானந்தா, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், இந்திய ராணுவ லப்டினட் கர்னல் புரோகித், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் ஜோசி, மற்றும் ராஜேஷ் சவுத்திரி, சமந்தர் சிங், கேரளாவை சேர்ந்த சுரேஷ் நாயர், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக பிடிபட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய பல ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு துறை தேடிவருகிறது.
இந்தியாவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் துணை அமைப்புகளான, பஜ்ராங்க்தல், அகில பாரதிய வித்தியாதி பரிசத் ( ABVB) இந்து ஜாக்ரன் மன்ஞ்ச் ஆகிய இயக்கங்களின் தொடர்புகள் வெளிவந்தன. இந்த வழக்கில் பிடிபட்டு சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் மேற்கூறிய இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளை  நடத்துவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் காடுகளில் உள்ள தங்களது ரகசிய முகாம்களில் சோதனை நடத்தியிருந்தனர்.
எனவே இதுத்தொடர்பான ஆதாரங்களை மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு துறை காடுகளில் கடும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த  வெடிக்குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்தவரும் ( குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயர் வெளிவராமல் இருக்க) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் மற்றும்  இதற்க்கு பண உதவி செய்தவருமான சுனில் ஜோசியை கொன்ற  பல்பீர் சிங்கையும் தேசிய புலனாய்வு துறை இந்த தேடுதல் வேட்டைக்கு அழைத்து வந்திருந்தது.
இந்தூரில் மண்டல்வாடா கிராமத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை பல்பீர் சிங் கைது செய்யப்பட்டான். ஜோஷியின் நெருங்கிய நண்பனும், கொலையில் குற்றவாளிகளில் ஒருவனுமான ஜிதேஷ் பட்டேலின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து 9 MM பிஸ்டலின் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மீதமுள்ள தோட்டக்களை உபயோகித்து ஜோஷி கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
குராதியாராவு காட்டுப் பகுதியில் இந்த சோதனை நடந்தது. மேலும் தேவாஸின் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள "மோ" காட்டுப் பகுதியில் இன்னொரு சோதனை நடந்தது.. ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய புகலிடமாக திகழும் தீபால்பூரில் இருந்து முன்னர் கைதுச் செய்யப்பட்ட கமால் சவுகான் என்ற  தீவிரவாதியை அழைத்து வந்து இங்கு சோதனை நடத்தப்பட்டது.

Thursday, January 10, 2013

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க வலுவான சட்டம் தேவை – இமாம்ஸ் கவுன்சில்!

வக்ஃப் சொத்துக்களை அதிகாரிகளை பறிமுதல் செய்வதை தடுக்க வலுவான வக்ஃப் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னையில் நடந்த ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அவர். மேலும் அவர் கூறியது: “டெல்லியில் கெளஸியா மஸ்ஜிதும், காலனியும் இடித்த அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. மஸ்ஜிதும், காலனியும் உடனடியாக மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடூபடுவதற்கான வழியை திறந்துள்ளது என்று பொதுச் செயலாளர் பேராசிரியர் மவ்லானா ஷாஹித் கூறினார். ஆனால், இந்த எதிர்ப்பு டெல்லி சம்பவத்தில் மட்டும் ஒதுங்கிவிடக்கூடாது. கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், குஜராத், ஒடீஸா உள்பட நாட்டின் இதர பகுதிகளுக்கும் தேவை என்று அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க ஒழுக்க வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்தல்

2.பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதியை நிலைநாட்டவேண்டும்

3.முஸ்லிம்களுக்கு போதுமான இட ஒதுக்கீட்டை வழங்க ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்துதல்

4.வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுதல் 

5.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தலைமையில் நபிகளாரின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பிரச்சாரம் நடத்தப்படும். ‘நேசத்திற்குரிய நபி’ என்ற தலைப்பில் நடத்தப்படும் பிரச்சாரத்தில் நபி(ஸல்) அவர்களின் சமூக மாற்றத்திற்கான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.

இக்கூட்டத்தில் செயலாளர்களான மவ்லானா ஷாஹுல் ஹமீத் பாகவி, மவ்லானா அஸ்ரார் ஃபலாஹி, மவ்லானா மாஜித் காஸ்மி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் தொடரும் போலீஸ் ரவுடிகளின் அக்கிரமம்!

மகாராஷ்டிர மாநிலம்  "துலியா" நகரத்தில் கலவரத்தை அடக்குகிறோம் என்று போலீஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள துலியா என்ற நகரில் 06/01/2013  அன்று போலீசாரின் கண்  மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். குண்டடிபட்ட  நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

கொல்லப்பட்டவர்கள் விபரம்:  முட்டையை விற்பனைச் செய்வதற்காக வந்த அஸீம் ஷேக்(24), காய்கறி வாங்க வந்த இளைஞரான மார்க்க அறிஞர் ஆஸிஃப் அப்துல் ஹலீம்(வயது 30), 12-வது வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேல்(வயது 17), எலக்ட்ரீசியன் இம்ரான் அலி கமருத்தீன்(வயது20) ஆகியோர் மரணமடைந்துள்ளனர். சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட இன்னொரு நபர் நேற்று முன் தினம் மரணமடைந்தார்.

கலவரத்துக்கான காரணம்: ஒரு பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர் நடத்தும் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் அதற்கான பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து, அந்த 4 பேரையும் ஹோட்டல் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். அடிவாங்கியவர்கள் சிறிது நேரத்தில் பெரிய கும்பலுடன் வந்துள்ளனர்  இதனால் கலவரம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்திய போலீஸ் பயங்கரவாதம்:  தொடர்ச்சியாக 3மணி நேரம் நடத்தப்பட்ட கல்வீச்சில் காயங்கள் ஏற்பட்டதே தவிர யாதொரு உயிரழப்புகளும் ஏற்ப்படவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய இந்திய சிறுபான்மை எதிர்ப்பு  போலீஸ், முஸ்லிம்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது. பின்னர் வழக்கம் முஸ்லிம் வீடுகளின் கதவுகளை உடைத்து முஸ்லிம்களை கைது செய்தது.

மும்பை போலீசாரின் காவி சிந்தனை: இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், போலீஸார் முஸ்லிம்களை மட்டுமே தேடிப் பிடித்து சுட்டுக் கொலைச் செய்துள்ளனர். கலவரம் நடந்த இடத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத மார்க்கெட்டில் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக வந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
 
போலீஸாருக்கு பயந்து ஓடி தப்ப முயன்ற 12-ஆம் வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேலின் முதுகில் இரண்டு தடவை போலீஸ் துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா துளைத்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு முட்டைகளை விற்பனைச் செய்ய வந்த அஸீம் ஷேக்கை போலீஸ் சுட்டு கொன்றுள்ளது.  காகலவரத்தை காரணமாக வைத்து காவி சிந்தனை படைத்த காவல்துறை முஸ்லிம்களை மட்டும் வேண்டும் என்றே சுட்டு கொன்றுள்ளது.
 
போலீஸ் என்றால் நீதி! நேர்மை! இல்லை ரவுடிசம்! பயங்கரவாதம்!

Tuesday, January 8, 2013

தமிழக அரசின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.

தமிழகம் முழுவதும் மது ஒழிப்பிற்கு எதிராக பிரச்சாரங்களும் போராட்டங்களும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மதுபானக்கடைகள் அகற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் 15422 சாலை விபத்துக்கல் நடந்துள்ளது என்பதும் அதற்கு வாகனங்களை  ஓட்டும் வாகன் ஓட்டுனர்களின் குடிபோதையும் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துக்கள் குறைந்து, பொதுமக்கல் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.

இன்று நடக்கும் பாலியல் வன்முறைகளும், கொலை, கொள்ளை போன்ற கொடிய குற்றங்களும், போதை ஆசாமிகளின் செயல்பாடுகள் காரணம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம் பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மதுக்கடைகளை மூடி குற்றங்களை தடுப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

Sunday, January 6, 2013

இறைவனின் நாட்டம்.

                                   

                                     அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.

நேர்வழியை ஏற்றுக்கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தினரின் மீது வழிகெட்ட பெருங்கூட்டத்தினரால் அளவு கடந்த சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

வழிகெட்ட கூட்டத்தினர் ஒழுக்கக்கேட்டையும், பெரும் சீரழிவையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால்; பெருவெள்ளத்தை ஏற்படுத்தி அதில் அவர்கள் முழுவதையும் அழித்து விட்டு அவர்களின் சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு கூட்டத்தினரை காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக இறக்குவதற்காக இறை உத்தரவின்படி நபியவர்களால் கப்பல் கட்டி முடிக்கப்பட்டு அதில் ஏறச்சொல்லும் போது தான் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என்றுக் கூறி ஏறச் சொன்னார்கள்.

கப்பலை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதிலிருந்து அது ஏன் உருவாக்கப்படுகின்றது என்பது வரை இறைவன் நபியவர்களுக்கு வஹியின் மூலம் முன்கூட்டியே அறிவித்து விட்டதால் இதில் ஏறுங்கள் ஓடும் என்று உறுதியாக கூறமுடியும் என்றாலும் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என்று ஏன் கூறினார்கள் ?

                                                    படிப்பினைகள்

நம்மைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்காகவும் இறைவனை நிணைவு கூர்ந்து நன்றி செலுத்தக் கூடிய நாம் நம்முடைய எதிர்கால நிகழ்வுகள் இவ்வாறு தான் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நம்முடைய புலனுக்கு சரியாகத் தோன்றினாலும் அது நிகழ்வதும், நிகழாததும் இறைவனின் நாட்டத்தில் உள்ளது என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும், பிறருக்கும் பதியச் செய்யவேண்டும்.

மக்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபியவர்களின் சத்தியப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் இணைந்து கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தாருடைய மனதில் இதை ஆழமாக விதைக்க வேண்டும் என்பதற்காக கப்பல் ஓடும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என்றுக்கூறி ஏறச் சொன்னார்ககள்.

                                        பட்டைத் தீட்டிய வைரங்கள்.

இது ஒடாமல் நின்று விட்டால் ஏற்கனவே அசத்தியவாதிகளிடம் அனுபவித்த சித்ரவதைகளை விட கூடுதலாக அனுபவிக்க நேரிடலராம் என்ற அச்சத்தால் மீண்டும் அசத்தியத்திற்கே திரும்பி விட்டால் என்ன செய்வது என்று இழுத்துப் பிடித்து நிருத்துவதற்காக இது ஓடும் ஏறுங்கள் என்ற உற்சாக வார்த்தையைக் கூற வில்லை.

அரைகுறை நம்பிக்கையாளர்கள் பத்து ஒன்பதாக குறைந்தாலும் ஒன்பது எட்டாகக் குறைந்தாலும் இறுதியாக எத்தனைப்பேர் இறைநம்பிக்கையில் உறுதியுடன் நிற்கின்கின்றார்களோ அவர்களை இன்னும் இறைநம்பிக்கையில் தோய்த்தெடுத்து பட்டைத் தீட்டிய வைரங்கள் போல் மிண்ணச் செய்கின்ற பணியையே நூஹ் நபி காலத்திலிருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலம் வரை இறைத்தூதர்கள் செய்து வந்தனர்.

நம்மைக் கடக்கவிருக்கும் அடுத்த வினாடிப் பொழுதும் கூட நம் கையில் இல்லை வல்லமைப் பொருந்திய இறைவனின் திட்டத்தில் உள்ளது என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தோய்த்தெடுத்து இறைநம்பிக்கையில் பட்டைத் தீட்டிய வைரங்களாக மிண்ணியவர்களின் வாரிசுகள் இன்று

Ø கண்டிப்பாக அடுத்த மாதம் தந்து விடுகிறேன் 1000 ரூபாய் கடன் கொடுங்கள்; என்று வாக்குறுதி அளித்து கடன் பெரும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம்..



Ø கண்டிப்பாக வெள்ளிக்கிழமை இன்ன இடத்தில் உங்களை வந்து சந்திக்கிறேன் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள், பெருநாளைக்கு ஊருக்கு வந்து விடுகிறேன் எதிர் பார்த்தக் கொண்டிருங்கள், என்று வாக்குறுதி அளிக்கும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம.



Ø கண்டிப்பாக உங்கள் மகளை என் மகனுக்கு ( பிறந்து 6 மாதத்தில் இவன் ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ) முடித்து வைக்கிறேன் என்ற விதியின் அமைப்பை மறந்து வாக்குறுதி அளிக்கும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம்.

இவ்வாறு இறைவனை மறந்து வாக்குறுதி அளிப்பவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் விழிப் பிதுங்கி நின்றவர்கள பலரைப் பாரத்திருக்கின்றோம்.

                                               கண்டிப்பாக தந்து விடுகிறேன்.

சம்பளத்தில் கொடுத்து விடலாம் என்று நம்பிக்கை வைத்தே வாக்குறுதி அளித்து கடன் பெறுகின்றோம், ஆனால் அதற்கு முன் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு அதற்கே சம்பளம் முழுவதையும் ஒதுக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டு விடும். வாக்குறுதி அளித்து கடன் பெற்ற உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் பெரும் விரிசல் ஏற்பட்டு விடுவதை நமது அனுபவப் பூர்வமாக பார்த்து வருகிறோம்.

                                              கண்டிப்பாக வந்து விடுகிறேன்

வெள்ளிக்கிழமை விடுமுறை என்கின்ற காரணத்தால் வந்து வடுகிறேன் என்ற உறுதியான வாக்குறுதி அளிக்கிறோம், ஓவர்டைம் இருந்தால், அல்லது உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டால் பரவா இல்லை எனலாம். வருவதாக முன்கூட்டியே வாக்குறுதி அளித்தவரை விட முக்கியமான வேறொருவர் அழைத்து விட்டால் இவர் முக்கியமா ? அவர் முக்கியமா ? என்ற நெருக்கடியான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு முதலாமவர் புறக்கனிக்கப்பட்டால் அவர் நம்முடன் வருத்தப்பட்டு ஒதுங்கும் நிலை ஏற்படுகிறது.

வெக்கேஷன் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பெருநாளைக்கு ஊர் வந்துவிடுகிறேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறோம் ஆனால் கம்பெனியில் பெருநாளைக்கு வேறொருவரை அனுப்பி விட்டு அவர் வந்தப் பின்னரே நம்மை அனுப்புவதாக சொல்கின்றார்கள். வீட்டில் போன் செய்து சொல்லி விட்டோம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் மேலும் நமக்கு வெக்கேஷன் இருப்பதால் போய்த் தான் ஆகவேண்டும் என்று கம்பெனியில் சண்டைப் போட்டு இறுதியாக ஒன்வேயில் போகும் நிலை நம்மில் பலருக்கு எற்படுகிறது.

                                         கன்டிப்பாக முடித்து வைக்கிறேன்.

சிறு வயதில் பார்க்கும் போது அழகாக இருக்கலாம், சிறுது வளர்ந்ததும் அழகில் மாற்றம் ஏற்படும் அடுத்து படிப்பில் மந்தம் ஏற்படும், அடுத்து நடைமுறையில் மாற்றம் ஏற்படும், இதை எல்லாவற்றையும் விட வாக்குறுதி கொடுத்துக் கொண்டப் பெறறோர்களில் யாராவது ஒருவர் வசதியில் ஓகோ என்று ஆகிவிடலாம் ஒருவர் வறுமையின் கோரப்படியில் சிக்கிவிடலாம் நிலை மாறியப்பின் வாக்குறுதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு நிகரான வசதி படைத்தக் குடும்பத்தைத் தேடி ஓடி இரத்த உறவுகளை முறித்தக் கொண்டவர்கள் நம்மில் எத்தனை, எத்தனையோப் பேர்.

இறைவனை பொறுப்பு சாட்டாமல் தந்து விடுவேன், வந்து விடுவேன், முடித்து வைப்பேன் என்பதுப் போன்ற எதிர்கால நிகழ்வுகளை உறுதிப்படக் கூறினால் அவற்றை நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலமையை இறைவனே ஏற்படுத்துவான் என்பதை திருக்குர்ஆனின் 18வது அத்தியாயத்தில்; 32வது வசத்திலிருந்து 40வது வசனம் வரைப் பார்க்கலாம்.

Ø இன்ஷா அல்லாஹ் வருகின்ற சம்பளத்தில் திருப்பித் தந்து விடுகின்றேன் அல்லாஹ் நாடிவிட்டால் இன்னும் முன்கூட்டியேக் கூட தந்து விடுவேன்,


Ø வெள்ளிக்கிழமைக்குள் வேறு எதாவது முக்கிய அலுவல்கள் ஏற்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் வருகிறேன்.



Ø இதை விட வேறொரு நல்ல வாழ்க்கையை உங்கள் மகளுக்கு இறைவன் விதியில் எழுதி இருந்தால் அது தான் நடக்கும், அல்லது இது நடக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால் இதே நடக்கும்.

இவ்வாறான வார்த்தைகளையே அனைத்து எதிர்கால தேவைகளுக்காகவும் வெளிப்படுத்த வேண்டும். இதுவே இறைநம்பிக்கையாளர்களின் இனிய பன்புகளில் ஒன்றாகவும், இறைவனின் அடிமை என்ற தன்னடக்கத்தையும் ஏற்படுத்தும்.

அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! ''எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக! 23:24
கண்டிப்பாக என்ற பலமான வாக்குறுதி அளிக்காமல் அல்லாஹ் நாடினால் திருப்பித் தந்து விடுவேன் என்று அல்லாஹ்வை பொறுப்புச் சாட்டுவதால் மட்டும் நெருக்கடியான சூழ்நிலைக்கு தந்துதவ மறுத்தால் மனம் தளர்ந்து விட வேண்டாம் வேறொருவர் மூலம், அல்லது வேறு சிறந்த வழிகளில் அல்லாஹ் நெருக்கடியை தீர்த்து வைப்பான், அல்லாஹ் கைவிட்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை மனதில் கொள்ள வேண்டும்....அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக- பொறுப்பேற்பதில் அல்லாஹ் போதுமானவன். 4:81

                                                           இறுதி எச்சரிக்கை

மற்ற சமுதாயத்து மக்களில் சிலர் தன்னிடம் இருப்பு தாராளமாக இருந்தும் கொடுத்துதவ மனமில்லாதவர்கள் சினை ஆட்டைக்காட்டி இது தான் இப்பொழுது என்னிடம் இருக்கிறது இதை வேண்டுமானால் ஓட்டிக் கொண்டுப் போ என்பார்களாம் காரணம் சினை ஆட்டை ஓட்டிக்கொண்டுப் போக எவருக்கும் மனம் வராது.

நம்முடைய சமுதாயத்து மக்களில் சிலர் தன்னிடம் இருப்பு தாராளமாக இருந்தும் கொடுத்துதவ மனமில்லாதவர்கள் இல்லை என்று சொல்லாமல் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று இழுத்தவாறு கூறுவார்கள் (எல்லோரும் அல்ல சிலர்). இவ்வாறு இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று இழுத்தவாறுக் கூறுவதைக் கேட்டவர் கிடைக்காது என்று உறுதி படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார்.

நீ உலகில் வாழும் பொழுது உன்னிடத்தில் உணவு கேட்டு வந்தேன் தர மறுத்து விட்டாயே என்று இறைவன் கூற ! உலகின் அதிபதியாகிய என் இறைவா ! நீயா ? என்னிடமா ? உணவு கேட்டு வந்தாய் ? என்று அடியான் கூற !

ஒரு பசியாளி உன்னிடத்தில் உணவு கேட்டு வந்த பொழுது அவனுக்குத் தர மறுத்தாயே அவனுக்கு கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக கருதி இருந்திருப்பேனே என்று மறுஉலக விசாரணையில் இறைவன் கேட்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள்.

Ø இறைவன் கொடுப்பதற்கு நாடுகிறான்,

Ø தடுப்பதற்கு அல்ல !

Ø நாம் தடுப்பதற்கு இன்ஷா அல்லாஹ் கூறலாமா ?

Ø கொடுப்பதற்கே இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும் !

உண்மையில் இருப்பு இல்லாத பொழுது கேட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் நாம் இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறினால் இறைவன் எங்கிருந்தாவது நம்முடைய மடியை கேட்டவருக்காக நிறைத்திடுவான்.

உண்மையில் நம்மிடத்தில் இருப்பு இருந்து கொடுக்க மனமில்லாமல் இன்ஷா அல்லாஹ் என்றுக்கூறினால் நம்மிடத்தில் உள்ள மொத்தத்தையும் போக்கிடச் செய்யும் ஆற்றல் படைத்தவன் இறைவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எவருடைய உள்ளம் என்ன நோக்கத்தில் இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுகிறது என்பதை உள்ளங்களை பார்வையிடக்கூடிய இறைவன் அறிவதால் எதிர்கால நிகழ்வுகளுக்காக தூய எண்ணத்துடன் இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்.

ü இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுவது இறைவனின் பேராற்றலை வெளிப்படுத்தும் சிறந்த வார்த்தையும், நம்முடைய எதிர்கால தேவைகளுக்கான சிறந்த பிரார்த்தைனயுமாகும்.

எனவே இறைநம்பிக்கையாளர்கள் திறந்த மனதுடனும், சிறந்த நோக்கத்தடனும் இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், பொன்ற வார்த்தைகளை கூற வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

நன்றி : பிரதிபலிப்பு மாத இதழ்